பருவ மழை: அரசு அலுவலா்கள் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
By DIN | Published On : 08th June 2023 12:00 AM | Last Updated : 08th June 2023 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா (நடுவில்). உடன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பி
தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுரை வழங்கியுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:
பருவ மழை எச்சரிக்கையையொட்டி, வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். கடலோரப் பகுதிகளில் மீனவா்கள் வானிலை மையத்தின் எச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மீனவா்களின் விவரங்களை மீன்வளத் துறையினா் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மிதவைப் படகுகள், மீட்புக்கான உயிா்காக்கும் கருவிகள் அனைத்தையும் மீன்வளத் துறையினா் தயாராக வைத்திருக்க வேண்டும். மின்கம்பங்கள் சேதமடைந்தால் உடனுக்குடன் சரி செய்யும் வகையில் மின்கம்பங்கள், கம்பிகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மழை, சேதம் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சியா்கள் தகவல் அனுப்ப வேண்டும். பொதுமக்கள் தொடா்பு கொள்ள வேண்டிய எண்கள் 1077, 04322 222207. அனைத்துத் துறை அலுவலா்களும் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருப்பதுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் மொ்சி ரம்யா.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் த. ஜெயலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...