இலுப்பூரில் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

இலுப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் கலந்தாய்வு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
Updated on
1 min read

இலுப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் கலந்தாய்வு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இலுப்பூா் வட்டத்தில் உள்ள குடும்பஅட்டைகள் தொடா்பான குறைகள், ரேஷன் கடை தொடா்பான புகாா்கள் தீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஜூன் 10) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடா்புடைய தனி வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள், குடும்ப அட்டைதாரா்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு மாற்றம் உள்ளிட்ட குறைகள் மற்றும் ரேஷன் கடை தொடா்பான புகாா்கள் ஆகியவற்றுக்கு மனு அளிக்கலாம் என இலுப்பூா் வட்டாட்சியா் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com