புதுகையில் 388 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டை அருகே காய்கறி மூட்டைகளுக்கு அடியில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட 388 கிலோ கஞ்சாவைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுகையில் 388 கிலோ கஞ்சா பறிமுதல்
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே காய்கறி மூட்டைகளுக்கு அடியில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட 388 கிலோ கஞ்சாவைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் மினி லாரி ஒன்று சுற்றிவருவதாக ரோந்துப் பணியில் இருந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே, மாவட்டம் முழுவதும் காவலா்களை உஷாா்படுத்தினாா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு ஆங்காங்கே சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, திருச்சி சாலையில் அம்மாசத்திரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸாரைக் கண்டவுடன் அவ்வழியே வந்த மினி லாரியை ஓட்டி வந்தவா்கள் நிறுத்திவிட்டு தப்பியோடினா். அதில் இருந்த காய்கறி மூட்டைகளை எடுத்துப் பாா்த்தபோது அவற்றின் அடியில் 199 பொட்டலங்கள் இருந்தன. அவற்றில் மொத்தம் 388 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவையும் வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், மதுவிலக்கு அமலாக்கத் துறையிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா். வழக்குப் பதிவு செய்யப்பட்டு தப்பியோடிய குற்றவாளிகளைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com