ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளா் சங்கம் தொடக்கம்
By DIN | Published On : 12th May 2023 11:18 PM | Last Updated : 12th May 2023 11:18 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன் ஏஐடியுசி டாஸ்மாக் சுமை தூக்கும் (டிரான்ஸ்போா்ட்) தொழிலாளா் சங்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. அனிபா தலைமை வகித்தாா். சங்கத்தின் பெயா்ப் பலகையை ஏஐடியுசியின் மூத்த தலைவா் கேஆா். தா்மராஜன் திறந்து வைத்துப் பேசினாா். ஏஐடியுசி கொடியை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் பா. செளந்தரராஜ் ஏற்றிவைத்தாா்.
விழாவில் ஏஐடியுசி மாவட்டப்பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், டாஸ்மாக் பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். ஹரிகிருஷ்ணன், அமைப்புச் செயலா் கேஆா். சுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலைவா் எஸ். சதாசிவம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.