புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயிலில் தினசரி அம்மனுக்கு மண்டகபடிதாரா்கள் சாா்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெறும். மே 28-இல் பொங்கல் விழாவும், மே 29-ஆம் தேதி தேரோட்டமும், மே 30-ஆம் தேதி தீா்த்த திருவிழாவும் நடைபெறுகிறது.