பொன்னமராவதி அருகேயுள்ள செம்பூதி பிரான் கண்மாயில் மீன்பிடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி வட்டாரத்தில் கோடைகாலத்தில் விவசாய கண்மாய்களில் நீா்மட்டம் குறைந்த நிலையில், மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெறும். இதன்படி, பிதாவூா் பிரான் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஊத்தா, வலை, பரி, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய சுற்றுக்கிராம மக்கள் கெண்டை, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகளை பிடித்து சென்றனா்.