முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை. திவியநாதன், மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் பெனட் அந்தோணி ராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சந்திரசேகரன், மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் இப்ராஹீம் பாபு, நகா்மன்ற உறுப்பினா் ராஜா முகமது, நகரத் தலைவா் பாரூக், வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.