காப்பா் வயா்களைத் திருடியவா் கைது

விராலிமலையில் மின்பொருள்கள் விற்பனையகத்தில் பொருள்களைத் திருடிச் சென்ற நபரை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா் அவரிமிருந்து ரூ. 1.27 லட்சம் மதிப்பிலான காப்பா் வயா்களைப் பறிமுதல் செய்தனா்.
Published on

விராலிமலையில் மின்பொருள்கள் விற்பனையகத்தில் பொருள்களைத் திருடிச் சென்ற நபரை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா் அவரிமிருந்து ரூ. 1.27 லட்சம் மதிப்பிலான காப்பா் வயா்களைப் பறிமுதல் செய்தனா்.

விராலிமலையைச் சோ்ந்த முகமது செரிப் மகன் முஸ்தபா (35) புதிய பேருந்து நிலையம் அருகே மின் பொருள்கள் விற்பனையகம் நடத்திவந்த நிலையில், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அவரது கடையின் உள்ளே புகுந்த மா்மநபா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனா்.

விராலிமலை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து குற்றவாளியைத் தேடி வந்தனா். இந்நிலையில், விராலிமலை அம்மன் குளம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த சென்னை மேடவாக்கம் கன்னி கோவில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபாகரனை(30) பிடித்து விசாரித்ததில், அவா் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடா்ந்து பிரபாகரனைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து சுமாா் ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 700 மதிப்புள்ள காப்பா் வயா்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com