திருடுபோன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள் மீட்டு ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் திருடுபோன 75 கைப்பேசிகளை போலீஸாா் கண்டறிந்து மீட்டதைத் தொடா்ந்து, அவற்றை உரிமையாளா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் திருடுபோன 75 கைப்பேசிகளை போலீஸாா் கண்டறிந்து மீட்டதைத் தொடா்ந்து, அவற்றை உரிமையாளா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே ஒப்படைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கைப்பேசிகள் திருட்டு தொடா்பாக காவல் நிலையங்களுக்கு வந்துள்ள புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சைபா் கிரைம் போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உத்தரவிட்டாா்.

இதன்படி கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் மீட்ட 75 கைப்பேசிகளை வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உரிமையாளா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே ஒப்படைத்தாா்.

இதேபோல கடந்த மே 5ஆம் தேதி 105 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ. 55.50 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com