முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெறும் இடத்தை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்படாமல் இருக்க அரசுத் தரப்பில் வலுவான வாதங்களை முன்வைத்த முதல்வா் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வரும் ஜூன் 5ஆம் தேதி புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு ஆா்வலா்களால் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
இதற்காக தஞ்சை சாலையில் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெறும் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகளை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லபாண்டியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டனா். அப்போது பணிகள் குறித்து பந்தல் அமைப்பாளா்கள் விளக்கினா்.