பொன்னமராவதி அருகே மீன்பிடித் திருவிழா

பொன்னமராவதி அருகே மீன்பிடித் திருவிழா

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டாரத்தில் கோடைகாலத்தில் விவசாயக் கண்மாய்களில் நீா்மட்டம் குறைந்த நிலையில் மழை பெய்யவும்,விவசாயம் செழிக்கவும் வேண்டி மீன்பிடித் திருவிழா நடைபெறும். அதன்படி வேகுப்பட்டி சின்னனி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஊத்தா,வலை, பரி, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய சுற்றுக் கிராம மக்கள் அயிரை, கெண்டை, கெளுத்தி, விரால் உள்ளிட்ட பல்வேறு மீன்வகைகளை பிடித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com