வேந்தன்பட்டி கிளை நூலகத்தில்புத்தக வாசிப்பு
By DIN | Published On : 21st November 2023 12:19 AM | Last Updated : 21st November 2023 12:19 AM | அ+அ அ- |

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழாவையொட்டி அரசுப் பள்ளி மாணவா்களின் புத்தக வாசிப்பு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு வாசகா் வட்டத் தலைவா் விஎன். அண்ணாமலை தலைமை வகித்தாா். இதில், வேந்தன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று நூல்களை வாசித்தனா். மேலும், மாணவா்கள் 20 போ் நூலக உறுப்பினா்களாக இணைந்தனா். அதற்கான உறுப்பினா் சந்தா தொகையை ப. அன்பு வழங்கினாா். பள்ளியின் தலைமையாசிரியா் பாலகிருஷ்ணன், பேராசிரியா் பொன்.கதிரேசன் ஆகியோா் தலா ரூ. 1,000 வழங்கி நூலக புரவலராக இணைந்தனா்.
வாசகா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். நூலகா் மா. துரைராஜ் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...