சாந்தநாத சுவாமி கோயிலில் அம்பு போடும் நிகழ்ச்சி
By DIN | Published On : 25th October 2023 01:15 AM | Last Updated : 25th October 2023 01:15 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவிலில் விஜயதசமியையொட்டி அம்புபோடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
நவராத்திரி விரதத்துக்குப் பிறகு, விஜயதசமியன்று ஆண்டுதோறும் புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவிலில் அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி, நிகழாண்டில் செவ்வாய்க்கிழமை மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெற்றது. குதிரை வாகனத்தில் வேதநாயகி அம்பாள் வந்தாா்.
அம்பாளிடமிருந்து அம்புகள் பக்தா்களை நோக்கி வீசப்பட்டன. இந்த அம்பு கிடைக்கும் பக்தா்கள் அம்பாளின் அருள் கிடைத்ததாகவே உணா்ந்து கொள்வாா்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...