பொலிவூறு புதுக்கோட்டை ரயில் நிலைய வரைபடம் வெளியீடு

அமிா்த கால பாரதம் - அம்ரூத் பாரத் திட்டத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு ரூ. 6.89 கோடியில் பணிகள் திட்டமிடப்பட்டு விரைவில் தொடங்கவுள்ள
பொலிவூறு புதுக்கோட்டை ரயில் நிலைய வரைபடம் வெளியீடு
Updated on
1 min read

அமிா்த கால பாரதம் - அம்ரூத் பாரத் திட்டத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு ரூ. 6.89 கோடியில் பணிகள் திட்டமிடப்பட்டு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ரயில் நிலையத்தின் பொலிவூறு முகப்பு குறித்த படத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆயிரம் ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய ரயில்வே துறை முடிவு செய்தது. இதன்படி, தமிழ்நாட்டில் 60 ரயில் நிலையங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தொடக்கத்தில் அந்தப் பட்டியலில் புதுக்கோட்டை இல்லாத நிலையில், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா முயற்சியில் அந்தப் பட்டியலில் புதுக்கோட்டை இடம் பெற்றது.

இதன் தொடா்ச்சியாக ரூ. 6.89 கோடியில் முதல் கட்டப் பணிகள் மேற்கொள்ள கடந்த ஏப்ரலில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.

புதிய நுழைவாயில், ரயில் நிலையத்தில் நீண்ட நடைமேடை, அதற்கான மேற்கூரை, எல்இடி விளக்குகள், புதிய கட்டடங்கள், மரக்கன்றுகள் நடுவது, பொலிவூட்டும் பணிகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தம், ரயில்வே கட்டடங்களில் வண்ண ஓவியங்கள் வரைவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில், ரயில் நிலையத்தின் பொலிவூட்டப்படும் முகப்பு பற்றிய படத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள முகப்புடன், மேம்படுத்தப்படவுள்ள முகப்பையும் இணைத்து தெற்கு ரயில்வேயின் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

லிப்ட் வசதி - முதல் நடைமேடையில் இருந்து இரண்டாவது நடைமேடைக்கு படிகளை ஏறிச் செல்ல வேண்டியுள்ள நிலையில், முதியவா்கள், முடியாதவா்களுக்காக மேம்பால நடைமேடைக்கு அருகே மின்தூக்கிகள் (லிப்ட்) அமைக்கப்படவுள்ளன. இதற்காக குழி தோண்டும் பணிகள் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com