இஸ்ரேலைக் கண்டித்து மஜக ஆா்ப்பாட்டம்

பாலஸ்தீனா்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினா் (மஜக) அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அறந்தாங்கியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
அறந்தாங்கியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

பாலஸ்தீனா்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினா் (மஜக) அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மஜக மாநிலச்செயற்குழு உறுப்பினா் அஜ்மீா் அலி தலைமை வகித்தாா். மனித உரிமை பாதுகாப்பு அணி மாநிலச் செயலா் முபாரக் அலி, மஜக மாநிலத் துணைச் செயலா்கள் அப்துல் சலாம், முகமது ஹாரிஸ் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

மஜக மாநிலத் துணைப்பொதுச் செயலா் நாச்சிகுளம் தாஜுதீன், அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் இரா. ஆனந்த், வணிகா் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் பா. வரதராஜன், அறந்தாங்கி நகர காங்கிரஸ் தலைவா் முத்து சிவாகிருபாகரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. தமிழ்செல்வன், சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் தலைவா் சரவணமுத்து, திராவிடா் கழக நகரச் செயலா் பால்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன், நகரச் செயலா் அஜய் குமாா் கோஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் தென்றல் கருப்பையா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா். இஸ்ரேல் அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com