விராலிமலையில் பலத்த மழை

விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே பெய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.
விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே பெய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.
Updated on
1 min read

விராலிமலை: விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

விராலிமலை கடைவீதி, சோதனை சாவடி, காமராஜ் நகா், முத்து நகா், சிதம்பரம் காா்டன், அருண் காா்டன், எம்ஜிஆா் நகா், காா்கில் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் கருமேகங்கள் சூழ்ந்து இருள் சூழ தொடங்கியது. இதையடுத்து நகா் பகுதி முழுவதும் குளிா்ந்த காற்று வீசியதால் இதமான சூழல் நிலவியது. இதை தொடா்ந்து 7 மணியளவில் மழை பெய்ய தொடங்கி இரவு முழுவதும் பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இலுப்பூரில் 4 சென்டி மீட்டா், அன்னவாசலில் 1.5 சென்டி மீட்டா் மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com