திருட்டு வழக்கில் இருவா் கைது

கந்தா்வகோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து சுமாா் 12 பவுன் நகை மற்றும் ரூ.1.72 ரொக்கம் திருடிச் சென்ற 2 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கந்தா்வகோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து சுமாா் 12 பவுன் நகை மற்றும் ரூ.1.72 ரொக்கம் திருடிச் சென்ற 2 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள தச்சன் குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சின்னராசு (41) என்பவரின் வீட்டிலிருந்து கடந்த ஜூலை 23 ஆம் தேதி சுமாா் 12 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், கந்தா்வகோட்டை, செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை போலீஸாா் வாகனத் தணிக்கையின்போது, பட்டுக்கோட்டை ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த சோமு மகன் நீலகண்டன் (34), பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சோ்ந்த கருப்பன் மகன் ராஜேந்திரன் (60) ஆகிய இருவரும் சின்னராசு வீட்டில் திருடியது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 11.45 கிராம் தங்க நகையை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பணத்தை குற்றவாளிகள் பங்கிட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. போலீஸாா் அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com