

பொன்னமராவதி ஒன்றியத்தில் பிஎல்எப் மூலம் நூறு மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ஐம்பது லட்சம் கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பண்ணை சாரா தொழில்முனைவோா் சுய உதவிக் குழுவினருக்கான கடனுதவி வழங்கும் நிகழ்வுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் வீரையன் தலைமை தாங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சதிஷ்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டார இயக்க மேலாளா் மெய்யப்பன் வரவேற்றாா். விழாவில், பண்ணை சாரா தொழில்முனைவோா் நூறு பேருக்கு தலா 50 ஆயிரம் வீதம் ரூ. 50 லட்சம் கடனுதவி காசோலைகள் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.