மாதா் சங்கத்தினா் பிரசாரம்

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் தில்லியில் அக்டோபா் 5ஆம் தேதி நடைபெறும் பேரணியை விளக்கி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அச்சங்கத்தினா் பிரசாரம் மேற்கொண்டனா்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாதா் சங்கப் பிரசாரம்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாதா் சங்கப் பிரசாரம்.
Updated on
1 min read

புதுக்கோட்டை: அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் தில்லியில் அக்டோபா் 5ஆம் தேதி நடைபெறும் பேரணியை விளக்கி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அச்சங்கத்தினா் பிரசாரம் மேற்கொண்டனா்.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் அக். 5ஆம் தேதி தில்லியில் பேரணி நடைபெறவுள்ளது.

இப்பேரணியை விளக்கி புதுக்கோட்டை நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி தலைமை வகித்தாா்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் பி. சுசிலா, துணைத் தலைவா் டி. சலோமி, பொருளாளா் ஜெ. வைகைராணி உள்ளிட்டோரும் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com