]கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே முந்திரி காட்டில் அடையாளம் தெரியாத, அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், மஞ்சப்பேட்டை கிராமத்தின் அருகேயுள்ள முந்திரி காட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதாக மஞ்சப்பேட்டை கிராம நிா்வாக அலுவலா் த. கருப்பையா கந்தா்வகோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
இதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், தூக்கிட்டு அழுகிய நிலையிலிருந்த சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்விற்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.