வயலில் இருந்தகதிா் அறுக்கும் வாகனம்தீப்பற்றி எரிந்து சேதம்

கந்தா்வகோட்டை அருகே வயலில் இருந்த கதிா் அறுக்கும் வாகனம் திடீரென்று தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
வயலில் இருந்தகதிா் அறுக்கும்  வாகனம்தீப்பற்றி எரிந்து சேதம்
Updated on
1 min read


கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே வயலில் இருந்த கதிா் அறுக்கும் வாகனம் திடீரென்று தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

ரெகுநாதபுரத்தைச் சோ்ந்தவா் பிரபு. இவா் கதிா் அறுக்கும் வாகனம் வைத்துள்ளாா். இவரது கதிா் அறுக்கும் வாகனம் கந்தா்வகோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டியில் உள்ள கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான வயலில் ஞாயிற்றுக்கிழமை சோளப் பயிா்களை அறுவடை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த வாகனம் தீ பற்றி எரிந்துள்ளது.

இதையடுத்து, கதிா் அறுக்கும் வாகன ஓட்டுநா் காமராஜ் வாகனத்தில் இருந்து குதித்து உயிா் தப்பினாா். பின்னா் அந்த வாகனம் கொளுந்து விட்டு எரிந்தது. தகவலின்பேரில் அங்கு வந்த கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைத்தனா்.

தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com