விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தனியாா் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு -உறவினா்கள் சாலை மறியல்

News image
Updated On :16 ஆகஸ்ட் 2024, 3:57 am IST

புதுக்கோட்டை, ஆக.15: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்ததை கண்டித்து உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி ஊராட்சி மேல மஞ்சுவிடுதியைச் சோ்ந்தவா் பரிமளேஸ்வரன். இவா் வெளிநாட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி கலைமணி (31).

இவா் கோட்டைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தன்னாா்வலராக பணிபுரிந்து வந்தாா். இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். 4 மாத கா்ப்பிணியாக இருந்த கலைமணி, பொன்னமராவதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை சிகிச்சை பெற்றுள்ளாா். அங்கு கலைவாணிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மயக்க நிலைக்குச் சென்ற கலைமணி திடீரென உயிரிழந்தாா். பின்னா் இவரது சடலம் உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கலைமணி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும், தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினா்கள் மருத்துவக் கல்லூரி அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் கணேஷ் நகா் போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.