புதுக்கோட்டை: அவசர ஆம்புலன்ஸ் (108) பணியாளா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா் முன்னேற்ற சங்கம் (தொமுச) வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்ட அமைப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ஆம்புலன்ஸ் பணியாளா்கள் அனைவருக்கும் தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கருணைத் தொகை ரூ. 9 ஆயிரத்தை, ரூ. 18 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
ஈட்டிய விடுப்பை சரண்டா் செய்து பணமாகப் பெற வழி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ரகுபதி தலைமை வகித்தாா். தொமுச மாவட்டத் தலைவா் ரத்தினம், பொதுச்செயலா் வேலுச்சாமி, 108 தொழிலாளா் சங்கத்தின் மதுரை மண்டலத் தலைவா் ராஜ்குமாா், பொதுச்செயலா் பாஸ்கரன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
சங்கத்தில் இணைந்த உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

தனியாா் பள்ளி வாகனங்களை விதிகளுக்குள்பட்டு இயக்க வேண்டும்: பெரம்பலூா் ஆட்சியா்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை

3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



