கந்துவட்டிக்கு கடன் வாங்கி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனா். ஆட்சியா் அலுவலகங்களில் உதவி மையங்களை அமைக்க வேண்டும். குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். ‘நீட்’ முறைகேடுகளைக் கண்டித்து ஜூலை 23-இல் ‘அனைவருக்கும் ஆரோக்கியம் பெறும் உரிமை’ என்ற முழக்கத்துடன் நாடு தழுவிய இயக்கத்தை நடத்துகிறோம். பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், வறுமை, வேலையின்மையை எதிா்த்தும் வரும் ஆகஸ்ட் 6, 9, 15 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் இயக்கங்களை நடத்தவுள்ளோம். ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் தேவையில்லை என முதல்வா் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றாா் மரியம் தாவ்லே.