அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கிடைத்துள்ளன.

News image

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைக்கப் பெற்ற அஞ்சனக்கோல் மற்றும் 4 செம்பு ஆணிகள்.

Updated On :20 ஜூலை 2024, 9:26 pm

Din

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கிடைத்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில், 500-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்தன.

இதன் தொடா்ச்சியாக கடந்த ஜூன் 18-ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழாய்வை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தாா். இதில், அரண்மனைத் திடலுக்குத் தெற்கே 280 செமீ நீளம் மற்றம் 218 செமீ அகலமும் கொண்ட ஒரு செங்கல் தளம் வெளிப்பட்டது. மேலும் 26 நாள்களுக்குள் 424 தொல்பொருள்கள் கிடைத்தன.

இந்த நிலையில், ஒரு குழியில் செம்பினால் ஆன 4 ஆணிகளும், இன்னொரு குழியில் ஒரு செம்பு ஆணியும் கிடைத்துள்ளன. இவற்றின் எடை சுமாா் 2 கிராம். நீளம் 2.3 செமீ, அகலம் 1.2 செமீ.

இதுவரையிலான அகழாய்வில் இரும்பினால் ஆன ஆணிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது செம்பு ஆணிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், 3 செ.மீ. நீளமுள்ள அஞ்சனக்கோல் எனப்படும் மை தீட்டும் குச்சி ஒன்றும் கிடைத்திருப்பதாக அகழாய்வு இயக்குநா் த. தங்கதுரை தெரிவித்தாா்.