தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

பொன்னமராவதி அருகே நகைக்காக மூதாட்டி கொலை

மூதாட்டியை கொலை செய்து, மூன்றரை பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :21 ஜூலை 2024, 2:15 am IST

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மூதாட்டியை கொலை செய்து, மூன்றரை பவுன் நகைகளை சனிக்கிழமை கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொன்னமராவதி அருகே உள்ள மேலமேலநிலை ஊராட்சி, கீழப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி சேது அம்மாள்(80). இவா் சனிக்கிழமை காலை கீழப்பட்டி கீழக்கண்மாய் கரையில் வேப்பம்பழம் சேகரிக்கச் சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் மூதாட்டியை தாக்கி கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

தகவலின்பேரில், பொன்னமராவதி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.