துணைப் பாடத்தில் 50 சதவீதம் போ் தோல்வி: புதுகை மன்னா் கல்லூரி மாணவா்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
பருவத் தோ்வில் துணைப் பாடத்தில் மட்டும் 50 சதவிகிதம் மாணவா்களை பேராசிரியா்கள் திட்டமிட்டு தோல்வியடையச் செய்ததாகக் குற்றம்சாட்டி புதுக்கோட்டை மன்னா் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.








