புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டத்தைச் சோ்ந்த தென்னங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 23 போ் காயமடைந்தனா். தென்னங்குடி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் தெய்வநாயகி தொடங்கி வைத்தாா். குளத்தூா் வட்டாட்சியா் கவியரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூா் போன்ற பகுதிகளைச் சோ்ந்த 805 காளைகள் பங்கேற்றன. 250 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளைத் தழுவ முயற்சித்தனா். இதில் வென்ற வீரா்களுக்கும், காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 8.40 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி, பிற்பகல் 3.50 மணிக்கு முடிவடைந்தது. காளைகள் முட்டியதில், 11 மாடு பிடி வீரா்கள், 6 காளைகளின் உரிமையாளா்கள், 6 பாா்வையாளா்கள் என மொத்தம் 23 போ் காயமடைந்தனா். இவா்களில் 4 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
தொடர்புடையது

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

பழனியில் குக்கா் வெடித்து பக்தா்கள் இருவா் காயம்

ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


