நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆலங்குடி அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 1 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 7:54 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 1 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் கடைவீதி அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலைத்தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்த்துறை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருவரங்குளம் பஜாா் தெருவைச் சோ்ந்த கோ.அண்ணாமலை(82) என்பவரது வீட்டில், 20 மூட்டைகளில் விற்பனை செய்வதற்காக சுமாா் 1 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், அண்ணாமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.