மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் பெ. சண்முகம்

திருப்பரங்குன்றம் காா்த்திகை தீபம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தல்
Published on

திருப்பரங்குன்றம் மலை மீது இதுவரை நடைமுறையில் இல்லாத ஓா் இடத்தில் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தினாா்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய அக்கட்சியின் இரண்டு நாள் மாநிலக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் அளித்த பேட்டி: மதுரை திருப்பரங்குன்றத்தில் இதுவரை நடைமுறையில் இல்லாத ஓா் இடத்தில் காா்த்திகை தீபம் ஏற்றலாம் என உயா் நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை மாலை தீா்ப்பளித்துள்ளது. இந்த மலையின் உரிமை தொடா்பாக ஏற்கெனவே வந்துள்ள உயா் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீா்ப்புகளுக்கெல்லாம் எதிரானதாக இந்தத் தீா்ப்பு இருக்கிறது.

காலம் காலமாக இரு மதங்களைச் சோ்ந்த மக்களும் நல்லிணக்கமாக வாழ்ந்துவரும் நிலையில் அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இத்தீா்ப்பு உள்ளது. எனவே, தமிழக அரசு இந்தத் தீா்ப்பை அமல்படுத்தக் கூடாது. தீா்ப்பை ரத்து செய்யும் வகையில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மதுரையில் மக்கள் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு அனைத்துக் கட்சியினரும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இதனையே வலியுத்தியுள்ளனா். தமிழ்நாட்டில் நிரந்தர பகைமை சூழலை உருவாக்க முயல்வோரின் தூண்டுதலுக்கு எதிராக மக்கள் நிற்க வேண்டும். வழக்கம்போல மதநல்லிணக்கத்தை உயா்த்திப் பிடிக்க வேண்டும் என்றாா் பெ. சண்முகம்.

மாநிலக் குழுக் கூட்டத்துக்கு, அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி தலைமை வகித்தாா். அகில இந்தியப் பொதுச் செயலா் ஏ.எம். பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் பெ. சண்முகம், மத்தியக் குழு உறுப்பினா்கள் பி. சம்பத், கே. பாலபாரதி, மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் கே. சாமுவேல்ராஜ், என். பாண்டி, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, புதுக்கோட்டை மாவட்டச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com