புதுக்கோட்டை
திராவிடா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழக அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆளுநா் விரோதமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி புதுக்கோட்டை மாவட்டத் திராவிடா் கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மு. அறிவொளி தலைமை வகித்தாா். மாவட்டக் காப்பாளா் ஆ. சுப்பையா, மாவட்டச் செயலா் ப. வீரப்பன், மாநில பகுத்தறிவாளா் கழகத் துணை அமைப்பாளா் அ. சரவணன், பொதுக்குழு உறுப்பினா் சு. தேன்மொழி, மாவட்ட இணைச் செயலா் வெ. ஆசைத்தம்பி, மாவட்டத் துணைச் செயலா் ரெ.மு. தருமராசு உள்ளிட்டோரும் பேசினா்.
ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

