புதுகை நகரம், மாத்தூா் பகுதிகளில் நாளை மின்தடை

Published on

புதுக்கோட்டை நகா், மாத்தூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

புதுக்கோட்டை துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமலைநகா், நியூ டைமண்ட் நகா், வள்ளியப்பா நகா், மலையப்பா நகா், பாரி நகா், மாலையீடு, சிவகாமி ஆச்சிநகா், சிவபுரம், தேக்காட்டூா், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுகுடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 9) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் க. அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

மாத்தூா் இண்டஸ்ட்ரியல் பகுதி, மாத்தூா், பழைய மாத்தூா், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம் ,தேவளி, ஆவூா், ஆம்பூா்பட்டி நால்ரோடு, ஆம்பூா்பட்டி, புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்ப்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி , திருமலைசமுத்திரம் மற்றும் வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இதை மாத்தூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com