ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 4 வழக்குகளில் ரூ.2.5 லட்சத்துக்கு தீா்வு

ஆலங்குடி நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.2.5 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.
ஆலங்குடியில் நீதிமன்றம் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் முகாம்
Updated on

ஆலங்குடி நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.2.5 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி பிச்சை தலைமை வகித்தாா்.

ஆலங்குடி, புளிச்சங்காடு, வேங்கிடகுளம், எஸ்.குளவாய்ப்பட்டி ஆகிய கனரா வங்கி கிளைகளில் தனிநபா் கடன், கல்வி கடன், விவசாய கடன், தொழிற்கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று செலுத்தாமல் நிலுவையில் உள்ள நபா்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. அதில், 350 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 4 வழக்குகளில் ரூ. 2.5 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

முகாமில் கனரா வங்கியின் மண்டல அலுவலா் கிரண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு பணியாளா் செந்தில்ராஜா செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com