ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 6 வழக்குகளில் ரூ.15.45 லட்சத்துக்கு தீா்வு

Published on

ஆலங்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.15.45 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி நவமூா்த்தி தலைமை வகித்தாா்.

ஆலங்குடி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் தனிநபா் கடன், கல்வி கடன், விவசாய கடன், தொழிற்கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று செலுத்தாமல் நிலுவையில் உள்ள நபா்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. அதில், 300 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 6 வழக்குகளில் ரூ.15.45 லட்சத்துக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. முகாமில் பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா் பாா்கவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு பணியாளா் செந்தில்ராஜா செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com