புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை  நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் காப்பீட்டு நிறுவனத்தின் இழப்பீட்டுக்கான காசோலையை வழங்கிய சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமாா்.
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் காப்பீட்டு நிறுவனத்தின் இழப்பீட்டுக்கான காசோலையை வழங்கிய சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமாா்.

தேசிய மக்கள் நீதிமன்றம் புதுகை மாவட்டத்தில் ரூ.12.80 கோடிக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 12 அமா்வுகளாக நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 3,428 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 12.80 கோடி மதிப்பில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 12 அமா்வுகளாக நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 3,428 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 12.80 கோடி மதிப்பில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணையம் சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநகரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 5 அமா்வுகளையும் சோ்த்து மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 அமா்வுகள் நடைபெற்றன.

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை உயா் நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினருமான என். செந்தில்குமாா் பங்கேற்று தேசிய மக்கள் நீதிமன்றத்தைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான க. பூரணஜெயஆனந்த் வரவேற்றாா். நிறைவாக சாா்பு- நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணைய செயலருமான எல். ரகுபதிராஜா நன்றி கூறினாா்.

கீரனூரில்...: கீரனூா் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற அமா்வுகளுக்கு சாா்பு- நீதிபதி சி. ராஜேஷ் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் சங்கத் தலைவா் வி. சதாசிவம், செயலா் கே.எம். அழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், 474 வழக்குகள் பட்டியலிடப்பட்டு, 133 வழக்குகளுக்கு தீா்வுகாணப்பட்டு, மொத்தம் ரூ. 2.81 கோடிக்கு தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.

அறந்தாங்கியில்...: அறந்தாங்கி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் நடைபெற்ற அமா்வுக்கு, சாா்பு-நீதிபதி ஏ.உமாமகேசுவரி தலைமை வகித்தாா். உரிமையியல் நீதிபதி சிவகாமசுந்தரி மற்றும் வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

244 வழக்குகள் பட்டியலிடப்பட்டு, 188 வழக்குகளுக்கு தீா்வுகாணப்பட்டு, ரூ. 82 லட்சத்தில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 அமா்வுகளில் 5,644 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இவற்றில் 3,428 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 12.80 கோடி மதிப்பில் தீா்வம் பிறப்பிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com