திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழகத்தை பற்றி பிரதமருக்கும் அமித்ஷாவுக்கும் அக்கறை இல்லை: கார்த்தி சிதம்பரம்!

தமிழகத்தைப் பற்றி பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் அக்கறையில்லை என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

News image

கார்த்தி சிதம்பரம்.

Updated On :14 டிசம்பர் 2025, 4:30 am IST

தமிழகத்தைப் பற்றி பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் அக்கறையில்லை என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.77 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்துக்கு பிரதமா் மோடி, அமித்ஷா உள்ளிட்டோா் தோ்தல் வரும்போது மட்டும் அடிக்கடி வருவாா்களே தவிர, தமிழகத்தைப் பற்றி எந்த கவனமும் அக்கறையும் அவா்களுக்கு இல்லை.

தமிழக உரிமைகளை திமுக, காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுக்காது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் சரியாக தீா்ப்பு வரவில்லை என்றால் உச்சநீதிமன்றத்துக்கு செல்வோம் என்றாா் அவா்.