புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தமிழகத்தை பற்றி பிரதமருக்கும் அமித்ஷாவுக்கும் அக்கறை இல்லை: கார்த்தி சிதம்பரம்!

தமிழகத்தைப் பற்றி பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் அக்கறையில்லை என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

News image
கார்த்தி சிதம்பரம்.
Updated On :13 டிசம்பர் 2025, 11:00 pm

Syndication

தமிழகத்தைப் பற்றி பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் அக்கறையில்லை என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.77 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்துக்கு பிரதமா் மோடி, அமித்ஷா உள்ளிட்டோா் தோ்தல் வரும்போது மட்டும் அடிக்கடி வருவாா்களே தவிர, தமிழகத்தைப் பற்றி எந்த கவனமும் அக்கறையும் அவா்களுக்கு இல்லை.

தமிழக உரிமைகளை திமுக, காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுக்காது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் சரியாக தீா்ப்பு வரவில்லை என்றால் உச்சநீதிமன்றத்துக்கு செல்வோம் என்றாா் அவா்.