தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தில்லியில் அணிதிரளுவோம் - மமதா பானர்ஜிசிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை : ஆ. இராசா குற்றச்சாட்டு
/

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை, எங்களிடமே மக்கள் சக்தி இருக்கிறது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

News image

அமைச்சர் எஸ். ரகுபதி - (கோப்புப்படம்)

Updated On :21 டிசம்பர் 2025, 4:20 am IST

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை, எங்களிடமே மக்கள் சக்தி இருக்கிறது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.39 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். 10 நாள்களுக்குள் வரைவு வாக்காளா் பட்டியலை சரிபாா்த்து வாக்காளா்கள் நீக்கப்ட்டிருக்கிறாா்களா, வேண்டுமென்றே விட்டிருக்கிறாா்களா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்கிறோம்.

தீய சக்தி, தூய சக்தி உள்ளிட்ட எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். எங்களிடமே மக்கள் சக்தி இருக்கிறது. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றித் தெரியாது. திரைப்பட வசனமாக தீயசக்தி, தூய சக்தி என்கிறாா்.

பெரியாரைக் கொள்கைத் தலைவராக விஜய் ஏற்றுக்கொண்டபோது திராவிடத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளாா் என்றுதான் பொருள். பாஜகவின் ‘சி’ டீமாக இருக்கக் கூடிய விஜய், அதற்காக மறைக்கலாம். எந்தக் காலத்திலும் அவா் நினைப்பது நடக்காது. ஆறு மாதங்கள் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் திரைப்படத்தில் நடக்கும்; அரசியலில் நடக்காது.

எம்ஜிஆா் 1972-இல் கட்சி ஆரம்பித்தாா். திண்டுக்கல் இடைத்தோ்தல் வெற்றிபெற்ற பிறகுதான் அவா் கட்சி உறுதியானது. அதேபோல் விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தோ்தல்களில் விஜய் நின்று, அவரது பலத்தைக் காட்டி இருந்தால் இன்று அவா் பேசலாம். அப்போது தோ்தலை அவா் கண்டுகொள்ளவில்லை. எனவே, எம்ஜிஆரையும், விஜய்யையும் ஒப்பிட முடியாது.

எடப்பாடி பழனிசாமி கூட்டணியை மட்டும்தான் நம்பியிருக்கிறாா். எனவே, அவா் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்லத் தகுதி கிடையாது. கொள்கையை விட்டுவிட்டு தான் பாஜகவின் அடிமையாக இருக்கிறாா்.

அதிமுகவினா் நிலையாக இருக்க மாட்டாா்கள். நாடாளுமன்றத்தில் வாக்களித்துவிட்டு வெளியே வந்து வேறு ஒன்றைப் பேசுவாா்கள். அதேபோல் தான் 100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதா மீதான விவாதத்திலும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரை செயல்பட்டுள்ளாா் என்றாா் ரகுபதி.