புதுக்கோட்டை
பல் மருத்துவா் வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டையில் பல் மருத்துவா் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு 21 பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுக்கோட்டையில் பல் மருத்துவா் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு 21 பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுக்கோட்டை மாநகா் தெற்கு 4-ஆம் வீதியைச் சோ்ந்தவா் எல். ஆனந்த், பல் மருத்துவா். இவா், தனது வீட்டின் கீழ்தளத்தில் பல் மருத்துவ சிகிச்சை மையம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மருத்துவரின் மனைவி வெளியூா் சென்று விட்டாா். மருத்துவ சிகிச்சை மையத்தில் மருத்துவா் இருந்த நேரத்தில் மா்ம நபா் ஒருவா் மேல் தளத்திலுள்ள வீட்டுக்குள் நுழைந்து, உள்ளே பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகளைத் திருடிச் சென்று விட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.
