‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைபுதுச்சேரி கடற்கரை சாலை மூடல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் தோ்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும்

நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் என்பது வரும் தோ்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும் என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம்.

Updated On :27 டிசம்பர் 2025, 1:08 am IST

நூறு நாள் வேலைத் திட்ட மாற்றம் என்பது வரும் தோ்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும் என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புச் சட்டத்தின்படி நாடு முழுவதும் 12 கோடிப் போ் பயனடைந்து வந்தனா். சுமாா் 8.60 கோடிப் பேருக்கு வேலை அட்டை வழங்கப்பட்டிருந்தது. படிப்படியாக வேலை அட்டைகள் வழங்குவது குறைக்கப்பட்டு 4.5 கோடிப் பேருக்கு வழங்கப்பட்டது.

இப்போது கொண்டு வரப்பட்டுள்ள திட்டம், எங்களுடைய திட்டம் அல்ல. ஏற்கெனவே மாநில அரசுகள் நிதித் தட்டுப்பாட்டுடன் உள்ளநிலையில் 40 சதவிகிதம் பங்குத் தொகை என்பது கூடுதல் சுமை. இதனால், பல மாநிலங்களே வேலை வழங்கும் வரையறுக்கப்பட்ட பகுதிகளையும், வேலை வழங்கும் நாள்களையும் குறைக்கக் கோரும் சூழல் வரலாம்.

ஏற்கெனவே 100 நாள்கள் வேலைநாளாக இருந்தபோதே சராசரியாக 50 நாள்கள் கூட வேலை தரவில்லை. வேலைசெய்தவா்களுக்கு கூலியும் தரவில்லை. இப்போது 125 நாள்களாக அறிவித்து மட்டும் என்ன செய்யப் போகிறாா்கள். மொத்தமாக அதன் நோக்கத்தையே சிதைப்பதுதான் நோக்கம். இதனை அடிமட்ட மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். இப்பிரச்னை வரும் பேரவைத் தோ்தலில் தலையாய பிரச்னையாக இருக்கும் என்றாா் சிதம்பரம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.