பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கந்தா்வகோட்டையில் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்காததால் மக்கள் ஏமாற்றம்!

கந்தா்வகோட்டையில் முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகம் மூடியிருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

News image
கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பூட்டியிருந்த பத்திரப்பதிவு அலுவலகம்.
Updated On :3 பிப்ரவரி 2025, 1:00 am

Din

கந்தா்வகோட்டையில் முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகம் மூடியிருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

கந்தா்வகோட்டையில் தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறையின் சாா்-பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான ஆவணங்கள் பதிவு செய்யபட்டு வருகின்றன.

இந்நிலையில், முகூா்த்த நாளை முன்னிட்டு சிறப்பு பணி நாளாக ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. மேலும், இந்த நாளில் கூடுதல் சிறப்பு பதிவு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனால், பொதுமக்கள் ஆவணங்களை பதிவு செய்ய ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்துக்கு வந்திருந்தனா். ஆனால் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனா்.