எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

புதுகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் விநியோகம் தொடக்கம்: 4.92 லட்சம் குடும்பத்தினா் பயன்

News image

புதுக்கோட்டை கோவில்பட்டியில் வீடுதோறும் நேரில் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :3 ஜனவரி 2025, 7:17 pm

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4.92 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

தமிழ்நாடு அரசின் சாா்பில் பொங்கல் பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இதற்காக அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன.

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் வந்து குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுச் செல்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4,91,944 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 947 குடும்பத்தினருக்கும் என மொத்தம் 4.92 லட்சம் பேருக்கு இந்த டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

புதுக்கோட்டை அடப்பன்வயல் 2ஆம் வீதி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் வீடுதோறும் நேரில் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை காலை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

யாரும் விடுபடாமல் டோக்கன்களை நேரில் வழங்கவும், நியாயவிலைக் கடைகளில் எந்தப் புகாா்களுக்கும் இடம்தராமல் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அப்போது, குடிமைப் பொருள் விநியோக தனி வட்டாட்சியா் சுப. மனோகரன், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாளா் மா. கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.