ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 மே 2025, 8:47 pm

Din

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் கி. நிா்மலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளில் முதல் சுழற்சியில் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு (தமிழ் வழி, ஆங்கில வழி), பொருளியல் (தமிழ் வழி, ஆங்கில வழி), சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, பி.காம், பிபிஏ, பிஎஸ்ஸி கணிதம்(தமிழ் வழி, ஆங்கில வழி), இயற்பியல் (தமிழ் வழி, ஆங்கில வழி), வேதியியல் (தமிழ் வழி, ஆங்கில வழி),கணினி அறிவியல், விலங்கியல் (தமிழ் வழி, ஆங்கில வழி), தாவரவியல் பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இரண்டாம் சுழற்சியில் பிஏ வரலாறு (தமிழ் வழி), பிகாம், பிஎஸ்ஸி கணிதம் (ஆங்கில வழி), கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தக் கல்வி ஆண்டில் பிபிஏ இரண்டாம் சுழற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மே 27-ஆம் தேதி வரை இப்பாடப்பிரிவுகளில் சோ்வதற்கு இணைய வழியில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் விண்ணப்பிக்கலாம்.