சிறுமி பாலியல் வன்கொடுமை செங்கல்சூளை உரிமையாளருக்கு ஆயுள் சிறை
புதுக்கோட்டை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செங்கல் சூளை உரிமையாளருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தேக்காட்டூா் அருகே அரசந்தம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் சின்னச்சாமி (39). இவா் கடந்த 2023ஆம் ஆண்டு ஆக. 1-ஆம் தேதி 13 வயது சிறுமியை அவரது செங்கல் சூளையிலுள்ள கீற்றுக் கொட்டகையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளாா்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், சின்னசாமியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி ஆா். கனகராஜ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், சிறுமியைக் கடத்திய குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், கொட்டகையில் அடைத்து வைத்த குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனையை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.
