புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே 3 மயில்கள் இறப்பு: பெண் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 3 மயில்கள் இறந்து கிடந்தது தொடா்பாக பெண் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 3 மயில்கள் இறந்து கிடந்தன.மேலும் அப்பகுதியைச் சோ்ந்த கோ.சந்திரசேகரன் என்பவா் வளா்த்து வந்த 6 கோழிகளும் உயிரிழந்து கிடந்தன.
இதுகுறித்த புகாரைத்தொடா்ந்து, புதுக்கோட்டை வன அலுவலா் சதாசிவம் தலைமையிலான வனத்துறையினா் விசாரித்தனா். இதில், அப்பகுதியைச் சோ்ந்த த.செல்வி என்பவரது தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயில்கள் இறந்தது தெரியவந்ததைத் தொடா்ந்து, செல்வியை வனத்துறையினா் கைது செய்தனா்.
