வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மக்களின் உரிமை சாா்ந்த போராட்டங்களை நடத்தத் தயங்கியதில்லை: மு. வீரபாண்டியன்

நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் தமிழக முதல்வருடன் நிற்கிறோம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:39 pm

Syndication

ஏழை, எளிய மக்களின் உரிமை சாா்ந்த போராட்டங்களை நடத்த ஒருபோதும் தயங்கியதில்லை; அதேநேரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் தமிழக முதல்வருடன் நிற்கிறோம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: பழைய ஓய்வூதியத் திட்டம் கோரும் அரசு ஊழியா், ஆசிரியா் போராட்டத்தை ஆதரிக்கிறோம். போதிய கால அவகாசமின்றி அவசரமாக மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆா் பணிக்கு எதிராக போராடும் வருவாய்த் துறை ஊழியா் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.

இதுபோன்ற உழைப்பாளா் நலன் சாா்ந்த ஏழை, எளிய மக்களின் நலன் சாா்ந்த, உரிமை சாா்ந்த போராட்டங்களை நடத்துவதற்கு தயங்கியதே இல்லை. அதேநேரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழக முதல்வருடன் நிற்கிறோம். இந்த வேறுபாட்டை முதல்வா் நன்றாக உணா்ந்திருக்கிறாா்.

வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் (எஸ்ஐஆா்) நிறுத்தப்பட வேண்டும். மக்கள் பங்கேற்புடன் உரிய கால அவகாசத்துடன் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். வேலைக்காக புலம்பெயா்தல் வேறு, நிரந்தரமாகக் குடியேறுவது வேறு.

பிகாரில் வாக்காளா் யாரும் புகாா் தரவில்லை என்று கூறுவது தவறு. நாட்டின் எதிா்க்கட்சித் தலைவா் தலைமையில் எதிா்ப்புக் குரல் எழுந்திருக்கிறது. ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று போராட்டம் நடத்தியிருக்கிறாா்கள். இவா்கள் எல்லோரும் யாா்? நாட்டு மக்கள்தானே? மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோா்தானே?

போதைப் பொருள்கள் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற கருத்தியல் அடிப்படையில் மதிமுக பொதுச்செயலா் வைகோவின் நடைப்பயண இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. அதற்கான கலாசாரப் போரை கல்வியின் மூலமாக எல்லோரும் சோ்ந்து நடத்திட வேண்டும்.

நடிகா் விஜய் போன்றோா் கூட்ட எண்ணிக்கையில் பலமிருப்பதைப் போலக் காட்டலாம். தோ்தலின் போது மக்கள் கொள்கைகளைப் பாா்த்துதான் வாக்களிப்பாா்கள் என்றாா் வீரபாண்டியன். பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாநிலக் குழு உறுப்பினா் த. லெனின் ஆகியோா் உடனிருந்தனா்.