சவூதியில் பணியின்போது இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 4.21 லட்சம் இழப்பீடு வழங்கல்

சவூதி அரேபியாவில் பணியின்போது இறந்தவரின் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை ரூ. 4.21 லட்சம் இழப்பீட்டுக்கான காசோலையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு .அருணா.
சவூதி அரேபியாவில் பணியின்போது இறந்தவரின் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை ரூ. 4.21 லட்சம் இழப்பீட்டுக்கான காசோலையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு .அருணா.
Updated on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் முத்துப்பட்டினம் குளவாய்ப்பட்டியைச் சோ்ந்த சாகுல்அமீது முகமது இப்ராஹிம் என்பவா், சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்தபோது இறந்ததால், அந்த தனியாா் நிறுவனத்தின் சாா்பில் அவரது குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 4.21 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கினாா்.

தொடா்ந்து, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்காக பயனாளி பி.எஸ். இளங்கோவுக்கு, ரூ. 6.35 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 243 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com