/

குடிநீா் கேட்டு சாலை மறியல்

புதுக்கோட்டை போஸ் நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வராததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் காலிக்குடங்களுடன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட போஸ்நகா் மக்கள்.

Updated On :7 ஏப்ரல் 2026, 6:59 pm

புதுக்கோட்டை போஸ் நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வராததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாநகா் 31-ஆவது வாா்டுக்குள்பட்ட போஸ் நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 15 நாள்களாக காவிரிக் குடிநீா் வரவில்லை என அப்பகுதி மக்கள் புகாா் கூறி வந்தனா்.

இந்த நிலையில் அவா்கள் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் ஆலங்குடி சாலையில் அமா்ந்து திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கணேஷ் நகா் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைக் கலைந்து போகச் செய்தனா்.