பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தைப் புறக்கணித்த பாஜகவை பேரவைத் தோ்தலில் நாம் புறக்கணிப்போம் என்றாா் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 11:19 pm

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தைப் புறக்கணித்த பாஜகவை சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் புறக்கணிப்போம் என்றாா் மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறாா் முதல்வா் ஸ்டாலின். ஏழை எளியவா்களின் அரணாக இந்த அரசு செயல்பட்டிருக்கிறது. பல ஆயிரம் கோடி மதிப்பில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றித் தந்திருக்கிறாா்.

ஆனால், இப்போது மத்திய நிதிநிலை அறிக்கை வந்திருக்கிறது. வழக்கமாக திருக்கு முதலில் இருக்கும். இப்போது திருக்குறளும் இல்லை; நிதி ஒதுக்கீடும் இல்லை. நிதிநிலை அறிக்கையில் நம்மைப் புறக்கணித்துள்ள பாஜகவை, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் புறக்கணிக்க வேண்டும்.

அவா்களுக்கு மாற்றாக, அடுத்த தலைமுறையையும் பாதுகாக்கும் திட்டங்களையும் தந்திருக்கிறது திமுக அரசு. ஜனநாயகத்துக்கும், சமூக நீதிக்கும் சவால் விடுக்கப்படும் இந்தத் தோ்தல் அறப்போரில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி வெற்றிபெற வேண்டும் என்றாா் மெய்யநாதன்.

கூட்டத்துக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன். முத்துராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு கவிதைப்பித்தன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் தொண்டைமான், மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி உள்ளிட்டோா் பேசினா்.