மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பயனாளிகளுக்கு ரூ. 4.12 கோடியில் நலத் திட்ட உதவிகள்

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிக்கு வேளாண் உபகரணம் வழங்கிய அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:53 pm

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் இருந்து தோ்வு செய்யப்பட்ட பயனாளிகள் 2,065 பேருக்கு ரூ. 4.12 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை வழங்கினா்.

புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

விழுப்புரத்தில் முதல்வா் பங்கேற்ற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட 10 ஆயிரமாவது முகாமின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, துணை மேயா் மு. லியாகத் அலி, மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.