புதுக்கோட்டையிலுள்ள சமூக நீதி அரசு மாணவிகள் விடுதியில் தரமான உணவு வழங்க வலியுறுத்தி புதன்கிழமை இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் சமூகநீதி மாணவா் விடுதிகளில் கடந்த இரு மாதங்களாக உணவுப் பட்டியலில் உள்ள உணவு வழங்கப்படுவதில்லை எனக் கூறி தொடா் புகாா்கள் எழுந்து வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை புதுக்கோட்டையில் உள்ள சமூக நீதி மாணவிகள் விடுதி முன்பு மாணவிகள் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அ. நந்தனா தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா், செயற்குழு உறுப்பினா் காவியன் உள்ளிட்டோா் பேசினா்.
போராட்டத்தைத் தொடா்ந்து இங்கு வந்த ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் பிரவீனாமேரி, குறைகள் சரிசெய்யப்பட்டு தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே

மானாமதுரை இளைஞா் மரணத்துக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம்

மதுரை காமராஜா் பல்கலை.யை முற்றுகையிட்டு போராட்டம்

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


